நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு 1 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வீதம் 32 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நீங்கலாக 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிட கட்டுமான பணிகள் ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக நடைபெற்று வரும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுதல் பணிகள் போன்ற கட்டிட கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்த வாராந்திர அறிக்கையை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் கருத்துகளை கேட்டு அதற்கேற்றார்போல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மண்டலம் 1க்கு ஒரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து 5 மண்டலத்திற்கு தலா 1 மையம் வீதம் தரம் உயர்த்த ரூ.15 லட்சம் முதற்கட்டமாக வரப்பெற்றுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...