இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM YASASVI கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள் National Scholarship Portal மூலம் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான PM YASASVI (Top class education in schools for OBC, EBC & DNT students) அறிவிக்கப்பட்டுள்ளது என்று Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் kumaar தெரிவித்துள்ளார்.

2026-2027 கல்வியாண்டிற்கான இத்திட்டத்தில், National Scholarship Portal-ல் அறிவிக்கப்பட்டுள்ள 100% தேர்ச்சி பெற்ற சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனங்களில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ மாணவியர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


கல்வி உதவித்தொகை விவரங்கள்




இத்திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000 வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் கல்வி உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் 30% இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தகுதி நிபந்தனைகள்




மாணவ மாணவியர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று National Scholarship Portal-ல் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.


புதுப்பித்தல் விண்ணப்பம்




கடந்த நிதியாண்டில் (2025-26) இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ மாணவியர்கள், நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் 15.09.2026 ஆகும்.


புதிய விண்ணப்பங்கள்




2026-27 ஆம் ஆண்டு புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.


கூடுதல் தகவல்கள்




இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை National Scholarship Portal (http://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தகுதியான மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...