மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்- இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தாவே இன்று தில்லியில் உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.

1956-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தவர் அனில் மாதவ் தவே. இளைமைக் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து, பாஜக-வில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருந்தார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்தச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 60 வயதான அனில் மாதவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

மேலும், மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...