கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை - ஒற்றை சாளர முறைகோரி மனு

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை போல கலைக் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மதிமுக-வினர் இன்று கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் இந்தாண்டு 7 லட்சம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை போல, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றை சாளர முறையினை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்ய முடியும்" என ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...