வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 9 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவில் 2026-27 கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக, துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்ப வசதி செப்டம்பர் 5 முதல் திறக்கப்பட்டது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் TNAU சேர்க்கை இணையதளம் மூலம் செப்டம்பர் 9 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

துணைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், பொதுவிண்ணப்பத்தை முழுமையாக சமர்ப்பிக்காதவர்களும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொதுக் கலந்தாய்விற்குப் பிறகு ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மட்டுமே இதன் மூலம் நிரப்பப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டிஎன்ஏயூவில் விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் மீண்டும் துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றும் கலந்தாய்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களும் துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கக் கூடாது.

பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹600 ஆகவும், எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ₹300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டயப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு, பிசி, பிசிஎம் மற்றும் எம்பிசி/டிஎன்சி பிரிவினருக்கு ₹200, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ₹100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விருப்பப்படி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது விதிமுறைகளை மீறினாலோ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...