கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படையில் 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் என பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை 19 மண்டலங்களாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
கோவை: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துடியலூர் அருகே நடைபெற்றது.
வடமதுரை வி.எஸ்.கே. நகரில் உள்ள லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மேலிடப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். கட்சித் தலைமையின் முடிவின்படி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதேநேரம், மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. பூத் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி. மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் பி.டி. மோகன்ராஜ். மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். மகேஷ்குமார், வட்டாரச் செயலாளர் தம்பி பார்த்திபன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள், நகர மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடமதுரை வி.எஸ்.கே. நகரில் உள்ள லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மேலிடப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். கட்சித் தலைமையின் முடிவின்படி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதேநேரம், மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. பூத் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி. மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் பி.டி. மோகன்ராஜ். மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். மகேஷ்குமார், வட்டாரச் செயலாளர் தம்பி பார்த்திபன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள், நகர மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.