கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஒரு பெண் உட்பட வழக்கறிஞர்கள் என இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் உட்பட இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்று இறக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வழக்கறிஞர் விசாரித்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவரும் பெண் ஒருவரும் தாங்கள்தான் காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, அந்த வழக்கறிஞர் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சங்க செயலாளர் சுதீஷ், காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறப்பட்ட இளைஞர் மற்றும் பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அந்தப் பெண் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணும் அவருடன் இருந்த இளைஞரும் வழக்கறிஞர் ஒருவரை தள்ளிவிட்டதாக கூறப்படுவதால், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுதீஷ் அளித்த தகவலின் பேரில், பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...