வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செப்டம்பர் 16 முதல் 18 வரை நடைபெறுகிறது. பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் மு. ரவீந்திரன் பயிற்சியைத் துவக்கி வைத்துப் பேசினார். தனி அலுவலர் (வெளியீடுகள்) முனைவர். மா.இரா. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல், ஆராய்ச்சி முன்மொழிவுகள், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. முனைவர் சு. உமேஷ் கண்ணா வரவேற்புரையும், முனைவர் த. சம்சாய் நன்றியுரையும் ஆற்றினர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செப்டம்பர் 16.9.2026 முதல் 18.9.2026 வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியைத் துவக்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் மு. ரவீந்திரன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்கள், அறிவு மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிலரங்கு நடத்தப்படுவதாகக் கூறினார். மாணவர்களின் கல்வி வளர்ச்சி, நற்பண்புகள், திறன்கள் மற்றும் எதிர்காலத் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கு குறித்தும், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் நவீன கற்றல் அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்.



உலகளாவிய தரநிலைகளையும், உருவாகி வரும் புதிய வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்குத் தேவையான நவீன கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை பேராசிரியர்களுக்கு வழங்கும் வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முனைவர் மு. ரவீந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனி அலுவலர் (வெளியீடுகள்) முனைவர். மா.இரா. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். பாரம்பரிய வகுப்பறை, கரும்பலகை அடிப்படையிலான கற்பித்தல் முறைகளைத் தாண்டி, கல்வித்துறையில் உருவாகி வரும் புதிய சிந்தனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சிக்கான தெளிவான தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டிற்கான வெளிப்படையான, தெளிவான மதிப்பீட்டு அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அறிவியல் சிறப்பின் அடிப்படையாக நேர்மையான, மீண்டும் மேற்கொள்ளக்கூடிய மற்றும் தடமறியக்கூடிய ஆராய்ச்சி அமைய வேண்டும் என்றும், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனைகள், அனுபவங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் முனைவர் மா.இரா. சீனிவாசன் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல் முறைகள், உயர்தர ஆராய்ச்சி முன்மொழிவுகளை உருவாக்குதல், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை, கல்விசார் செயலிகள், இந்தியக் கல்வி அமைப்பைப் புரிந்துகொள்ளுதல், கல்விசார் மேன்மைக்கான தர உறுதிப்பாடு, தர அறிவியல் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான உத்திகள் ஆகிய தலைப்புகளில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வனவியல் துறை பேராசிரியர் மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. உமேஷ் கண்ணா வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் (ARM) முனைவர் த. சம்சாய் நன்றியுரையாற்றினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...