பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது -மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேச்சு.


பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்துவிட பாஜக முயல்கிறது எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழக அரசிற்கு தைரியமில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன் குனிந்து நடந்த அதிமுக அமைச்சர்கள், தற்போது டெல்லிக்கு முன் குனிந்து நடக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை எனவும், இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாகவும் சுட்டிகாட்டிய அவர், மைல்கல், மத்திய அரசு அலுவலகங்கள், டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் இந்தியை நுழைப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தி தேசிய மொழி இல்லை எனவும், 22 ஆட்சி மொழிகளில் ஒன்று தான் இந்தி எனவும் கூறிய அவர், இந்தி திணிக்கப்பட்டால் மற்றுமொரு மெரினா போராட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இந்தி கற்றுக்கொள்ளவில்லை எனில் நான் தேசத்துரோகி என்றால், தேச துரோகியாக இருக்கவே பெருமைபடுகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்து விட பாஜக முயல்கிறது எனவும் குற்றம்சாட்டிய அவர்,  இந்தி திணிக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...