கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் ர.வெற்றிசெல்வன் முன்னிலையில் செப்டம்பர் 18, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் 15 அன்று மேயர் தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூடத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் ர.வெற்றிசெல்வன் முன்னிலையில் இன்று (18.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேயர் ரங்கநாயகி தலைமையில், 15.09.2026 அன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூடத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ரவி தேஜா அறிவுறுத்தினார்.

முன்னதாக, கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அணைக்கட்டு முதல் குறிச்சி அணைக்கட்டு வரை தன்னார்வலர்கள் மூலம் நொய்யல் ஆறு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ் (பொ), செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ்(பொ), உதவி பொறியாளர்கள் சபரிராஜ், நவநீதகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...