தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளர் பொறுப்பேற்பு

ஜே.பி.பாண்டே தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளராகவும், தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும், இன்று பொறுப்பேற்றார். அவருக்கு முன்னர் முதுநிலை துணைப் பொதுமேலாளராக பொறுப்பில் இருந்த ஆர்.முகுந்தன் ரயில்வே பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றதால், பாண்டே அப்பொறுப்பில் ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாண்டே, கட்டுமானப் பொறியியலில் ரூர்கி ஐஐடியில் பி.டெக் பட்டமும், டெல்லி ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு ரயில்வேயின் பொருட்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தெற்கு ரயில்வேயில் பொறுப்பேற்கும் முன் மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

வடக்கு ரயில்வே மற்றும் வடமத்திய ரயில்வேயின் தலைமைப் பொருள்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்தில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 

மேலும் பாண்டே, 1998ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும், 2009-ம் ஆண்டில் சிங்கப்பூர் லீ குவான் யூ பொதுக் கோட்பாடு பல்கலைக் கழகத்திலும், 2015ம் ஆண்டு இத்தாலியில் உள்ள போக்கியோனி மேலாண்மைப் பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...