கோவை, திருப்பூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கப்பட்டு பின்னர் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வியை தொடர நடவடிக்கை எடுப்பதோடு உயர் கல்வி பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 17 பேர் தேர்வு எழுதினர். இதில் 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து படிப்பதற்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:-

1) கே.கிறிஷ்டியன் - 419

2) இ.சுதேஷ் - 409

3) ஆர்.சரவணகுமார் - 404

4) பி.அகஸ்டின் ஆசீர்வாதம் - 390

5) எஸ்.வெண்ணிலா - 388

6) சி.ஹரிபிரியா - 381

7) எஸ்.லோகேஷ்வரன் - 377

8) ஜி.பவித்ரா - 363

9) பி.முத்துமாரி - 353

10) ரேஷ்மா - 335

11) எஸ்.சந்திர சேகர் - 332

12) எம்.நந்தினி - 324

13) ஆர்.காளீஸ்வரி - 306

14) ஆர்.பானு பிரியா - 285

15) பி.பூஜா - 275

16) என்.வசந்தகுமார் - 267

17) டி.கார்த்திக் - 231

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...