தமிழர்களை இழிவுபடுத்தியதாக புகார் - ரஜினிகாந்த் கொடும்பாவி எரிப்பு.


நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் பலர் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போய்விட்டார்கள் என தமிழர்களை இழிவுபடுத்தியதாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழர்களை இழிவுபடுத்தி ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் பதிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி, கொடும்பாவியை எரித்து போராடட்ம் நடத்தினர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதை தாங்கி கொள்ளமுடியாமல், ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதாக அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.

தமிழ் மக்கள் என்னை வாழவைத்தவர்கள் என பேசும் ரஜினி தமிழர்களை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது எனவும், தனது திரைப்படங்கள் வெளியிடும் போது எல்லாம் அரசியலுக்கு வருவதாக நாடகம் ஆடுவதாக கூறிய அவர், ரஜினிகாந்த் இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...