விரைவில் சட்டமன்றம் கூட்டப்படும் என உதகையில் மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையில் 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய அவர்,மலைகளின் அரசியான நீலகிரிக்கு யாரும் மகுடம் சூட்டாத நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் மகுடம் சூட்டியதாகவும் பல்வேறு நல திட்டங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்தவர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டினார்.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது கொய்மலர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும்,ரோஜா தோட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் அவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.

தொடர்ந்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனன் மற்றும் கோபாலகிருஷ்னன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று உதகை பேருந்து நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்த உடனடியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை வழங்க இந்த அரசு தயாராக இருப்பதாக கூறிய முதலமைச்சர்,முன்னாள் முதல்வர் பாணியில் பிறரை அழிக்க நினைத்து அழிந்த பக்தன் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறியும் தன்னை யாரும் வளர்த்து விடவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே தான் வளர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது உதகை தாவரவியல் பூங்காவை சீரமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிகள் விரைவில் துவங்கும் எனவும் கூறினார்.இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியில் 2 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் விரைவில் தமிழக சட்டமன்றம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...