சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி?


காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக  சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியை விமர்சனம் செய்யும் அளவிற்கு ரஜினி பேசியதற்கும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி  இதனை தெரிவித்தார். மேலும் இரு அணிகள் இணைப்பிற்கான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது எனவும் இரட்டை இலை மீட்கவேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறினார். காவிரி பிரச்சினையில் சத்யராஜ் படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய ஆட்சியை பற்றி விமர்சிக்கும் படி ரஜினி பேசுவது சரியல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தன்னை விமர்சனம் செய்தவர்களை பற்றி பாராட்டி பேசிய ரஜினி, ஆட்சியை விமர்சிக்கும் படி பேசி இருப்பதாகவும்  தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு நன்றாக இருப்பதற்கு சட்டம் ஓழுங்கு நன்றாக இருப்பதே காரணம் எனவும் நடிகர்கள் பேசும் போது பார்த்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...