தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகளால் ஈரோடு ரயில்நிலையத்தில் இரவு நேர திடீர் பயணச்சீட்டு பரிசோதனை

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியில் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு ரயில்நிலையத்தில் நேற்று (19,05,2017) இரவு 8 மணி முதல் இன்று (20,05,2017) அதிகாலை 4 மணி வரை திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.  சேலம் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் எம். ராஜேஸ்வரன் அவர்கள் தலைமையிலான 16 பேர் கொண்ட வணிகவியல் குழு மற்றும்சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆணையர் சிவதாஸ் தலைமையிலான 15 ரயில்வே பாதுகாப்புப் படையினர் குழு  மேற்கொண்ட இந்த திடீர் சோதனையில் 61 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 21,050 ருபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இந்த இரவு நேர பயணச்சீட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு செயல்படுத்தியமைக்கு சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மற்றும்  சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் அவர்களையும் வணிகவியல் மற்றும் ரயில்வே பாதுகாப்புபடையினரையும் பாராட்டியதுடன், இத்தகு சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  ரயில் பயணிகளையும் தகுந்தத பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...