12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் கீழ் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் வளையான்குட்டை தோட்டம் ஊராட்சியில் வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விதி 110-ன் கீழ் வேளாண்பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பல்வேறு திட்டங்கள் பெற்று பயன்பெற வேண்டுமென்ற அடிப்படையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு மையம் செயல்படும் வகையில் முன்னோடி விவசாயி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதி விவசயிகளுக்கு எவ்வகையான உபகரணங்கள் வழங்கினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டு அதன் படி இயந்திரத்தின் மொத்த மதிப்பு ரூ.25 இலட்சத்திலிருந்து பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மானியம் கிடைத்திடும் வகையில் தேவையான வேளாண் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

அந்த வேளாண் இயந்திரத்தின் மூலம் பயனாளி தங்கள் பயன்பாட்டிற்கு போக அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவார். இவ்வாறு வேளாண் பொறியியல் துறையின் மூலம் இப்பணியை மேற்கொள்ளும்பொழுது அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தங்கள் பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள பேருதவியாக இருக்கின்றன.கடந்த ஆண்டு மட்டும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிராக்டர், ரோட்டா வேட்டர், ஐந்து கொத்து கலப்பை, ஒன்பது கொத்து கலப்பை, சுழல் கலப்பை, தட்டு வெட்டும் கருவி முதலியவை அடங்கும். இதன் மூலம் அந்தந்த பகுதிக்கு தேவையான உபகரணங்களை பெற்று பயன்பெறுவதே ஆகும். 

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்பொறியியல் துறையின் மூலம் 17 மையங்களில் ரூ.1.70 கோடி மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 189 விவசாயிகளுக்கு 55.90 கோடி மானியத்தில் பவர் வீடர், தட்டு வெட்டும் கருவி, ஸ்பிரேயர், பவர் டிரில்லர், ரோட்டாவேட்டர் ஆகிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளி, மின் சக்தி மூலம் மோட்டார் இயங்கும் திட்டம், மின் சக்தி மூலம் உலர்த்தி அமைக்கும் திட்டம், தேசிய வளம் குன்றா வேளாண் திட்டம், ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் உபகரணங்கள் வழங்ப்படுவதுடன் மேலும்  பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டம் துவக்கப்பட்டு நடுத்தர தடுப்பணைகள் அமைத்து பயன்பெறும் வகையில் இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் 10 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன. மேலும் தங்கள் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானித்திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...