நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் - முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்.எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று பார்ப்பது இன்னமும் தொடர்கின்றது என குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓ.பி்.எஸ் டிவிட்டர் தகவல் தவறாக பதிவிடப்பட்டது எனவும் தற்போது அந்த பதிவு சரி செய்யப்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் தங்கள் அணி உறுதியாக இருப்பதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் எனவும் இரு அணிகள் தரப்பிலும் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது எனவும் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், வலிமையான நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என தெரிவித்தார். ரஜினி அரசியல் வருகை என்பது வரவேற்க வேண்டியது என கூறியவர் ரஜினி நல்ல மனிதர் எனவும் தெரிவித்தார். அதிமுகவை பா.ஜ.க நேரடியாகவே இயக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என்றார். 11ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது வரவேற்கதக்க நடவடிக்கை என பாராட்டியவர் அமைச்சர் செங்கோட்டையன் செய்படுத்திய கிரேடு முறை திட்டம் அருமையான திட்டம் எனவும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகல்வி துறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் பாராட்டினார். தவறை சுட்டிகாட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிகாட்டியும் விமரசிக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்றவர் பள்ளிகளில் அம்மா கிட்ஸ் உபகரணங்களை உடனடியாக வழங்கப்பட்டால் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக மாநில பாடதிட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...