உதகை மலர் கண்காட்சி இறுதி நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு 121-வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. 



மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.



உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.

இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...