இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்கு தேவை என மகளிர் சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமொழி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரும்புக்கடையில் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்வுக்கு எந்த வகையிலும் முரணானது இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் பெண்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முசஃப்பர் கலந்துகொண்டு இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.

இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தலாக், சொத்துரிமை, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள மார்க்கம் என்பதைத் தெளிவு பட பேசினார். 



காங்கேயம் ஸ்னேஹா சொசைட்டி சர்வீஸ் அற்புத பவுல் ராணி, வழக்கறிஞர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாய்மை, மேன்மை, பொறுமை, மென்மை என பல தன்மைகளைக் கொண்ட பெண்மையின் உரிமைகளையும் கடமைகளையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெசீமா சித்தீக்கியா விளக்கினார். இறைச் சட்டமே அனைத்திற்கும் தீர்வு என்ற தலைப்பில் இஸ்லாமியா பள்ளி ஆசிரியை அஸ்மாபீ தய்யிபா உரையாற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் தேவை குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஃபர்சானா தலைமுறை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் இஸ்லாமிய சட்டங்களே அனைத்திற்கும் தீர்வு, அதனை பெண்களாகிய நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என அனைத்து பெண்களும் ஒரு சேர உறுதிமொழி மேற்கொண்டனர். சலீனா அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி நெறியாளர் ஷக்கீலா நன்றி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...