வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா



28 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடி நியமனம் வாயிலாக பணியமர்த்தப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 39 வனச்சரக அலுவலர்களுக்கான 2015-17 வனச்சரக பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.

அதிக வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 1948 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பொறுப்பில் சென்ற கோவை தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம் சார்பில் உதவி வனப்பாதுகாவலர் நிலைக்கு கீழ்ப்பட்ட வன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை 1990-ஆம் ஆண்டில் மாநில அரசின் பொறுப்புக்கு வந்தது.



அதில் தமிழ்நாடு, கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 18 மாத பயிற்சியானது மத்திய அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் படியும் 19 பாடங்கள் மற்றும் அதுதொடர்பான பயிற்சி கடந்த 2015 ல் துவஙப்பட்டு, பயிற்சி காலத்தில் நாட்டில் மிக முக்கியமான வன சூழல் பகுதிகளுக்கு 146 நாட்கள் கல்வி பயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்பு முறைகள் குறித்து கற்றனர்.

மேலும், 10 நாட்கள் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படைப்பிரிவிலும் 8 நாட்கள் கோவை மத்திய தனி பாதுகாப்பு காவல் படைப்பிரிவிலும் சிறப்பு அதிரடி பயிற்சி வழங்கப்பட்டது. 2015-17 ஆண்டின் முடிவில் 6 பெண்கள் உட்பட 39 பயிற்சியாளர்களுக்கு வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட வனத்துறை அலுவலர் ராம சுப்ரமணியன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

இதில், கேரள மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து 13 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 4 பேரும், உத்தரகாண்ட்டில் இருந்து 3 பேரும் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒருவரும் என 26 பேர் வனத்துறை அமைச்சரிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...