கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபாட்டில்களை உடைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

கோவை கணபதிபுதூர் அடுத்துள்ள சங்கனூர் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததையடத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக மதுவை பதுக்கிவைத்து அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸாரிடம் அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஏற்கனவே பல முறை புகார்கள் அளித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.



இந்நிலையில், மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் நேற்று (மே 20) கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்ததை அறிந்து அங்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை சாலையில் வீசி எறிந்தனர். இதனிடையே, மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து மதுபாட்டில்களையும் வாலிபர் சங்கத்தினர் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதது.

இதேபோல், கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை மறித்த போலீஸார் 15 நாட்களுக்குள் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...