ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

123-சட்டமன்ற உறுப்பினர்கள், 38 அமைச்சர்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 98 சதவிகித தொண்டர்களின் பலம் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு மேலே உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தரைமட்டத்தில் என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என ஓ.பி.எஸ். அணிக்கு சூசகமாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது. 

ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.

தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...