உக்கடம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை உக்கடம் குளத்தில் மூழ்கி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...