நீலகிரி நீதிபதி அதிரடி: சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களுக்கு பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாததால் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு நடிகர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, சேரன், அருண் விஜய், விவேக், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் எட்டுபேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு  வரும்போதெல்லாம் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையிலும், அந்த எட்டு நடிகர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களின் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...