நீலகிரி நீதிபதி அதிரடி: சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களுக்கு பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாததால் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு நடிகர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, சேரன், அருண் விஜய், விவேக், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் எட்டுபேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு  வரும்போதெல்லாம் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையிலும், அந்த எட்டு நடிகர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களின் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...