கோவையில் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கிடு முறை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...