கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக செளந்திரவேல் பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 11ம் தேதி காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். உறவினர்கள் யாரும் உடனடியாக வராததால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கிட்டானின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுருந்தது.



இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.அப்பொழுது பெயரில் குழப்பம் ஏற்படவே உரிய சான்றிதழ் வாங்கி வரும்படி மருத்துவ அலுவலர் செளந்திரவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு வந்த கில்மோர் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்ததுடன்  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன்  செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ஒருவரை பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர்.

மேலும மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் 
100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர். கில்மோர் அக்னிகதிர் என்ற பெயரில் பத்திரிகை நடத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலிசார் தீவிர நடவடிகை எடுத்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...