நீலகிரியில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...