ஸ்மார்ட் கார்டுகளில் நிலவி வரும் பெயர் குழப்பங்களை நீக்க வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்


ஸ்மார்ட் கார்டுகளில் நிலவி வரும் பெயர் குழப்பங்களை நீக்க வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 6 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 972 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுவினியோக திட்டத்தை முழு கணினிமயமாக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று கோவையில் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

தமிழக அரசின் முன்னோடி திட்டமான தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள ஒரு கோடியே 91 லட்சம் ரேசன் கார்டுகளில் ஒரு கோடியே 32 லட்சம் கார்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்களை முழுமையாக பதிவு செய்துள்ளனர். 52 லட்சம் பேர் பகுதியான தகவல்களை பதிவிட்டுள்ளனர். தகவல்களை பதிவிடாத ஒரு லட்சத்து 96 ஆயிரம் கார்டுதாரர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

ஆதார் கார்ட்டில் இருந்து டிரான்ஸ்லேசன் செய்யும் போது ஏற்படும் குழப்பங்களால் சில ஸ்மார்ட் கார்டுகளில் பெயர்கள் மாறிவருவதாக புகார்கள் எழுகின்றன. இதனை களைய வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சனைகள் சீர்செய்யப்படும். 

கோவை வட்டத்தில் மொத்தமுள்ள 9 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகளில் 3 லட்சத்து 52 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் 972 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...