பைக்ரேஸ் வீரர்களுக்கு சுசுகியுடன் இணைந்து ஜே.கே. டயர் வழங்கும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த பைக்ரேஸ் வீர்ர்களை இருபது ஆண்டுகளாக இனங்கண்டு ஊக்கமூட்டி வருகிறது ஜே.கே. டயர் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இது நம்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பைக்ரேஸ் வீரர்களை உருவாக்கி உரமேற்றும் புதியபணி.



இந்திய மோட்டார் பந்தயக்களத்தில் புதுமைகளைப் புகுத்திய ஜே.கே.டயர், உலகின் முன்னணி நிறுவனமான சுசுகியுடன் கைகோர்க்கிற இந்த நிகழ்வு, இந்திய பைக்ரேஸ் களத்தில் தனித்துவமான தேசிய பைக்ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக அமையும். கடந்த 20 ஆண்டுகளில் எட்டமுடியாத இலக்கை இது எட்டியுள்ளது. 

இந்த போட்டிகள் பைக்ரேஸில் ஆர்வத்துடன் இந்தியாவின் மூலைமுடுக்கிலும் முயன்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பளித்து, அவர்களின் சாம்பியன் கனவை மெய்யாக்கும். 

ஏரத்தாள சர்வதேச பைக்பந்தய வீர்ர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் இப்பொழுதிருந்து நாங்கள் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம் என்கிறார் ஜே.கே.டயர்ஸ் மோட்டார்ஸ் போர்ட் தலைமை நிர்வாகி சஞ்சய்சர்மா. 

இருசக்கர மோட்டார் வாகன உலகில் தடம்பதித்த ஜே.கே.டயர்ஸ், மேலும் முன்னேறி பைக்ரேஸ் சாம்பியன்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பார்முலா ஒன் வீர்ர்களான நரேன்கார்த்திகேயன், கருண்சண்டாக், மற்றும் புதிய பாணியிலான வீரர் அர்ஜூன்மைனி ஆகியோர் ஜே.கே.மோட்டார் ஸ்போர்ட் ஆதரவால் உயர்ந்தவர்கள்.

ஜே.கே.டயர்ஸ் வழங்கும் சுசுகிஜிஜ்ஜர்கப் 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் இருபிரிவுகளாக நடைபெறும். 12 வயதிலிருந்து 16 வயதுடையோருக்கானது ஒருபிரிவாகவும், மற்றொன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியாக அமையும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...