போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை உடனடியாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் - சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புளூ ஹில்ஸ் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் தலைமையில் மாநிலக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.



இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...