கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல் ஆணையரிடம் இளைஞர் புகார்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக இளைஞர் ஒருவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் அவரது நண்பர்களான நேரு கல்லூரியில் பயிலும் ஹரி, கிஷோர், கண்ணன் ஆகிய மாணவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

அப்போது மகேஷிடம் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் மடிக்கணினி, கைபேசி போன்றவற்றை மகேஷிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது மாணவர்களின் கைபேசிய சோதித்த போது அதில் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா, கொக்கெயின், எல்.எஸ்.டி போதை பொருட்களை வாங்கி கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மகேஷ் கேட்ட போது, மாணவர்கள் தகாத முறையில் பேசுவதோடு சிலர்  வழக்கறிஞர் என்ற பெயரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கல்லூரிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தனது உயிருக்கு பாத்துகாப்பு வழங்கக் கோரியும் மகேஷ் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...