இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்.


இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து போத்துனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ள மத்திய அரசு மிருகவதைக்கு எதிராகவும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து, எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது., அதில் குறிப்பாக கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் போது துன்புறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் போத்தனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டின் தோலை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சி உணவு உண்ணுவதற்கு தடை விதிப்பதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...