தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைந்த அளவு சிமெண்ட்டையே வழங்குவதாகவும் அமைச்சர் வேலுமணி  தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் இன்று  கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார். பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து  வருகின்றது என்றார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை தமிழக அரசு நிகழ்ததி இருக்கன்றது என தெரிவித்தார்.மேலும் லாரிகள் மூலம் 6700 நடை குடிநீர்  சென்னையில் உள்ள மக்களுக்கு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைவாகவே சிமெண்ட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் உருவப்படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி,எதிர்கட்சிகளுக்கு தங்கள் குற்றப்பின்ணனி குறித்தும் தெரியும் எனவும் சட்டப்படி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...