இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை- மோடி உருவபொம்மை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கைது

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய மோடி அரசு சட்டமியற்றியதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது. பசு கன்றுகளை விற்பதற்கு உரிய நடைமுறைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல கால்நடை துறையிடம் சான்று பெற வேண்டும் என மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.

இதனால் நாடு முழுவதும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களை வஞ்சிக்கம் மத்திய அரசின் இத்தகையப் போக்கைக் கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவபொம்யை எரிக்க முயன்றனர்.

அப்போது, மத்திய அரசு தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் பின்பற்றி வருவதாகவும், தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை பின்பற்றி ஆட்சி நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த தமிழ்புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...