இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை- மோடி உருவபொம்மை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கைது

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய மோடி அரசு சட்டமியற்றியதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது. பசு கன்றுகளை விற்பதற்கு உரிய நடைமுறைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல கால்நடை துறையிடம் சான்று பெற வேண்டும் என மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.

இதனால் நாடு முழுவதும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களை வஞ்சிக்கம் மத்திய அரசின் இத்தகையப் போக்கைக் கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவபொம்யை எரிக்க முயன்றனர்.

அப்போது, மத்திய அரசு தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் பின்பற்றி வருவதாகவும், தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை பின்பற்றி ஆட்சி நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த தமிழ்புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...