ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது - தங்க நகை உற்பத்தியாளர்கள் கேரிக்கை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்க்கு 1.25 சதவிகிதத்திற்கும் மேல் வரி விதிக்கக் கூடாது என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக தொழிற்துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தி பெருநகரங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகளவு தங்க நகை உற்பத்தி தொழிலாளர்களும் கோவையில் உள்ளனர்.

இது வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்திக்கு வரி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் 4 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு 4 சதவிகிதம் வரி விதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது எனவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வணிக வரித்துறை இணை ஆணையர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்துள்ளோம். தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...