ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது - தங்க நகை உற்பத்தியாளர்கள் கேரிக்கை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்க்கு 1.25 சதவிகிதத்திற்கும் மேல் வரி விதிக்கக் கூடாது என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக தொழிற்துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தி பெருநகரங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகளவு தங்க நகை உற்பத்தி தொழிலாளர்களும் கோவையில் உள்ளனர்.

இது வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்திக்கு வரி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் 4 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு 4 சதவிகிதம் வரி விதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது எனவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வணிக வரித்துறை இணை ஆணையர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்துள்ளோம். தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...