டாக்டர். கலாம் நூலகம் சார்பில் 2-வது மெகா புத்தக நிகழ்ச்சி கோவையில் துவக்கம்


கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஆர்க் தன்னார்வ அமைப்பு, கோவை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை, கூடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆர்க் தன்னார்வ அமைப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயலாற்றி வருகின்றனர்.

ஸ்வச் பாரத் ஸ்வச் சர்வேக்ஷன் வித்யாலயா, உடலுருப்பு தானம், ஸ்ரீ சத்குரு ஆதிவாசி பள்ளி- கல்லார், மருத்துவ உதவி, பெண்கள் மற்றும் திருநங்கைகள் மேம்பாடு என பல்வேறு துறைகளிலும் ஆர்க் தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஆர்க் அறக்கட்டளை, 100 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் டாக்டர் கலாம் என்னும் நூலகம் அமைத்து மாணவர்களின் பயிலும் திறமையை மேம்படுத்தி வருகிறது.

இந்த நூலகத்தின் சார்பில் இன்று 2-வது மெகா புத்தக நிகழ்ச்சி கோவை புரூக்ஃபீல்டு வணிகவளாகத்தில் துவங்கியது. இந்நிகழ்ச்சி இன்று முதல் வரும் ஜூன் 4ம் தேதி வரை நடைபெறும்.



இந்நிகழ்ச்சியின் மூலம் பழைய மற்றும் புதிய புத்தகங்களை சேகரித்து டாக்டர் கலாம் நூலகம் மூலம் நூறு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு +91-9364123123, +91 -9791985668, +91-9943951411 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது u :[email protected] என்ற இணையதள பக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

புத்தகங்களை தானமாக வழங்க முன்வருவோர் +91-9364123123 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும்பட்சத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து புத்தகங்கள் பெறப்படும்.

இதுகுறித்து ஆர்க் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான அபர்னா கூறுகையில், டாக்டர் கலாம் நுலகம் சார்பில் கடந்த வருடம் முதல் புத்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இரண்டாவது புத்தக நிகழ்ச்சியில் 150 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வீட்டிற்கே சென்று புத்தகங்களும் சேகரிக்கப்பட்டன. பெரும்பாலும் முதியோர்களே இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு இலவசமாக புத்தகங்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் முதியோர்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில், முதியோர்கள் தை சொல்லும் போது வீடியோவாக பதிவு செய்து பள்ளிகளுக்கு  அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம், பழைய பாரம்பரிய கதைகளை புதிய பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வர்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...