குன்னூரில் 59-வது பழக்கண்காட்சி கோலாகலமாக இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜுனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாபழம், பம்ளிமாஸ், முலாம் பழம் வாழை பிளம்ஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை டன் திராட்சை மற்றும் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காளையை இளைஞர் அடக்குவது போன்ற அமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 



மேலும், பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள காளை மாடு, ஆடு, செம்மறி ஆடு, காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.



மேலும், அரிய வகை பழங்களான பீச், ப்ளம், விக்கி உள்ளிட்ட 120 வகைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பழக்கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...