சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 11 லட்சம் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 15 ஆயிரத்து 450 பேர் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்தால் கருணை மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்கி வருவது நடைமுறை. அதன்படி இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் அப்பாடத்திற்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. ஆனால் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சி.பி.எஸ்.இ) இம்முடிவுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடியாக தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி கருணை மதிப்பெண் இன்றி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை திடீரென ரத்து செய்யக் கூடாது என்று கூறி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையால் தள்ளிப்போன சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...