டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் மற்றும் பொட்டையாபண்டிபுரம்பு ஆகிய கிராமத்து பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் கிராமம், கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம், முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலை வழி சந்திப்பில் கல்லுக்குழி பேருந்து நிறுத்தம் அருகே ரத்தினசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 322 என்னும் எண் கொண்ட மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இப்பகுதி, விவசாய நிலம் மற்றம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த டாஸ்மாக் கடையினை கடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள், அருகில் உள்ள விவசாயிகள் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு மதுகுடிக்க வருவோரால் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...