போளுவாம்பட்டி வனப்பகுதியில் குட்டி யானை பலி

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 



இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.

இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...