தமிழக முதலமைச்சருக்கு வல்லார கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகள் அனுப்பி தமிழ் புலிகள் அமைப்பினர் நூதன போராட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி முடித்தது உள்ளிட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் மறந்து அதிகமாக கட்சி செயல்பாடுகளில் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை நினைவுகூறும் வகையிலும் தமிழக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் ஞாபக சக்திகளை அதிகரிக்கும் மாத்திரைகளை அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டத்தில் இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அஞ்சல் நிலையத்திற்கு முதலமைச்சருக்கு அனுப்ப வல்லாரை கீரை, வெண்டைக்காய், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை தமிழ் புலிகள் அமைப்பினர் கொண்டுவந்தனர். அப்பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், போலி டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்வி துறையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தும் விதமாக தமிழ் புலிகள் சார்பில் வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகளை அனுப்பி வைக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...