திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-

மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை. 

மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. 

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...