கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெறும் 25 சதவிகித இடஒதுக்கீடு சேர்க்கை

கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.

சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...