கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூறைதீர் கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இணை இயக்குநர் ஏ.புஸ்பாபாய் மற்றும் துணை இயக்குநர் கே.மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) த.சீ.சேஷாத்ரி, மாவட்ட கருவூல அலுவலர் டி.சி.எல்.நடராஜன், உதவி கருவூல அலுவலர் எஸ்.ராமர் மற்றும் பிற துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்குறைதீர் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக 48 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 33 விண்ணப்பங்களுக்கு பல்வேறு அரசு துறை அலுவலர்களிடமிருந்து பதில் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 15 விண்ணப்பங்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

குடும்ப நல நிதி 50 ஆயிரம் ரூபாய் வீதம் இரு பயனாளிகளுக்கு ஒட்டு மொத்த தொகையாக 10 ஆயிரம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வூதியர்களுக்கு வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...