கல்வி நிறுவனங்கள் அருகே செயல்படும் கடைகளில் போதை பொருள் குறித்து ஆய்வு செய்யப்படும்- சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி


உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு வாரம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட சுகாதார துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து போதை பொருள் தடுப்பது குறித்தும், போதை பொருட்களுக்கு மக்கள் அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கோவை அரசு கலை கல்லூரி அருகே விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் தங்களது பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பானுமதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போதை பொருட்களை முற்றிலும் தடுக்க அவற்றை விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளுக்கு நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அபராதங்கள் விதித்து வருவதாக தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் வழிகாட்டுதல்படி வாரம் முழுவதும் கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் கோவை பிபிஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் புகையிலை எதிர்ப்பு பேரணி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு புகையிலை மற்றும் புற்றுநோய் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...