கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி

கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலை சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறைத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்குகளுக்கு ஏற்றவாறு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி மண்டல நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நிதி உதவி பெருவோர் பட்டியலை வெளியிடுவார்.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக துணை தலைவர் அறிவுடை நம்பி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 46 பேரின் 30 வழக்குகளுக்கு ரூ.16 லட்சம் வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் நோக்கில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்டல நன்னடத்தை அலுவலர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...