கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்

கோவையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பாதியிலேயே சென்றதால், விவசாயிகள், அதிகாரிகளுடன் காரச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படுவதில் மெத்தனம் காட்டுவதாக உள்ளது.



மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும்.

கோவையில் தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்டவை சாகுபடி அதிகளவு இருந்தும் அவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாதது காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் உள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கப்படும் விவசாயிகள் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும். கணினியில் பட்டா பூமி தொடர்பாக தவறான தகவலை வேண்டுமென்று பதிவேற்றம் செய்யும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட விவசாயிகள் சார்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...