இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக நீதி கேட்டு கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சசி குமார் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யவில்லை.

எனவே, சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் அதிமுக இரு அணிகளும் மோதிக்கொண்டு இருப்பதாகவும், அதனால் சட்ட ஒழுங்கு சீராக இல்லை எனவும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பரணியம் குற்றம்சாட்டினார். மேலும், தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-க்கு சசிகுமார் கொலை வழக்கை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்து முன்னணியினரால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...