இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக நீதி கேட்டு கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சசி குமார் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யவில்லை.

எனவே, சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் அதிமுக இரு அணிகளும் மோதிக்கொண்டு இருப்பதாகவும், அதனால் சட்ட ஒழுங்கு சீராக இல்லை எனவும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பரணியம் குற்றம்சாட்டினார். மேலும், தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-க்கு சசிகுமார் கொலை வழக்கை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்து முன்னணியினரால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...