கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததை அடுத்து லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

கோவை சித்தாபுதூர்- நவ இந்தியா இடையே தனலட்சுமி நகர் என்ற பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுக்கடை வராது என அபோலீசார் உறுதியளித்தால் மட்டுமே கலைவதாக கூறி  பொதுமக்கள் சாலையில் அமர்ந்த படுத்தும் போராட்டத்தை தொடர்ந்தனர் .இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததையடுத்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் பொதுமக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...